sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மார்கழியில் பக்தர்கள் வழிபாடு

/

மார்கழியில் பக்தர்கள் வழிபாடு

மார்கழியில் பக்தர்கள் வழிபாடு

மார்கழியில் பக்தர்கள் வழிபாடு


ADDED : டிச 17, 2024 01:39 AM

Google News

ADDED : டிச 17, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், டிச. 17-

அரூர் பகுதியில் மார்கழி மாத பிறப்பையொட்டி, அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜை நடந்தது. அரூர் பழையபேட்டையிலுள்ள கரிய

பெருமாள் கோவில், கடைவீதியிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், மாரியம்மன் தெருவிலுள்ள வாணீஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் மருதிப்பட்டி, கொங்கவேம்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில், கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் வீட்டு வாசலில்

அதிகாலையில் கோலமிட்டு வழிபட்டனர்.

* தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண சுவாமிக்கு நேற்று காலை, 5:30 மணிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள், திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடி கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். இதேபோல், இலக்கியம்பட்டி நித்யகல்யாண பெருமாள் கோவில், கோட்டை பரவாசுதேவ சுவாமி கோவில், செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோவில், மூக்கனுார் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us