sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உள்ளாட்சி பதவிக்கு ஒரே நாளில் 1,633 பேர் வேட்பு மனு தாக்கல்

/

உள்ளாட்சி பதவிக்கு ஒரே நாளில் 1,633 பேர் வேட்பு மனு தாக்கல்

உள்ளாட்சி பதவிக்கு ஒரே நாளில் 1,633 பேர் வேட்பு மனு தாக்கல்

உள்ளாட்சி பதவிக்கு ஒரே நாளில் 1,633 பேர் வேட்பு மனு தாக்கல்

1


ADDED : செப் 26, 2011 11:45 PM

Google News

ADDED : செப் 26, 2011 11:45 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் உள்ளாட்சி பதவிக்கு ஆயிரத்து 633 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் துவங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 3 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆகிய கட்சிகளில் 50 சதவீத பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நேற்று மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் 40 சதவீதம் பேர் கட்சியின் உத்தரவுப்படி வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 22ம் தேதியில் இருந்து நேற்று வரையில் நேற்று அதிகபட்சமாக ஆயிரத்து 633 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 13 பேரும், நகராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு 20 பேரும், டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு எட்டு பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்டனர் பதவிக்கு 1,151 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 260 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 112 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று காலை முதல் அமாவாசை துவங்கியதால், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு அடைந்தது. இன்றும் அமாவாசை தொடர்வதால், முக்கிய அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரையில் 2 ஆயிரத்து 378 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக கிராம பஞ்சாயத்து வார்டு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த காலங்களை விட இந்த தேர்தலில் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் நடந்துள்ளது.










      Dinamalar
      Follow us