/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு மாநிலத்தில் தர்மபுரி 2ம் இடம் பிடித்து சாதனை
/
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு மாநிலத்தில் தர்மபுரி 2ம் இடம் பிடித்து சாதனை
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு மாநிலத்தில் தர்மபுரி 2ம் இடம் பிடித்து சாதனை
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு மாநிலத்தில் தர்மபுரி 2ம் இடம் பிடித்து சாதனை
ADDED : டிச 21, 2024 01:31 AM
தர்மபுரி, டிச. 21-
தர்மபுரி மாவட்டத்தில், அரசு பள்ளி அளவில், 78 மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்று, மாநில அளவில், 2 ம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களின் திறனை ஊக்குவிக்க, தமிழ் மொழி திறனாய்வு தேர்வு கடந்த அக்., 19 ல் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என, 5,317 பேர் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியானது.
இதில், சேலத்தை சேர்ந்த, 132 மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், 33 பேர், அரசு பள்ளி மாணவர்கள், 78 பேர் என, 111 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில், அரசு பள்ளி அளவில், 78 மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவில், 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இத்தேர்வில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம், 1,500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளது.