sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் பீதி

/

விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் பீதி

விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் பீதி

விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் பீதி


ADDED : ஆக 11, 2011 02:28 AM

Google News

ADDED : ஆக 11, 2011 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அருகே விவசாய பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளால் விவசாயிகள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை தாம்பல் கிராமத்தில் தென்பெண்ணையாறு ஓடுகிறது.

இக்கிராமங்களை ஒட்டி வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கரும்பு, கம்பு, மரவள்ளிக்கிழங்கு, சோளம் பயிரிடப்படுகின்றன. இவற்றை வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த வாரம் தாம்பல் கிராமத்தை சேர்ந்த பெரியவன் (50), ராஜமாணிக்கம் (43), செல்வராஜ் (37) ஆகியோரின் 5 ஏக்கர் கம்பு பயிரில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. கடந்தாண்டும் இதே போல் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. 'விவசாய பயிர்களை வன விலங்குகளிடமிருந்து காப்பாற்ற வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us