sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தந்தையை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது

/

தந்தையை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது

தந்தையை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது

தந்தையை கொலை செய்த வாலிபர் அதிரடி கைது


ADDED : செப் 17, 2011 01:22 AM

Google News

ADDED : செப் 17, 2011 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே தந்தையை கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுப்பட்டி அருகே பாப்பம்பாடி. இங்கு காட்டுகொட்டாயை சேர்ந்தவர் லாரி டிரைவர் தனபால் (45). இவரது முதல் மனைவி தேன்மொழி. இவர்களுக்கு இளமுருகன் (21) என்ற மகன் உள்ளார். தனபாலுவுக்கும், முதன் மனைவி தேன்மொழிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 20 ஆண்டுக்கு முன் பிரிந்து விட்டனர்.தனபால் சின்னப்பிள்ளை என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திக் (16) என்ற மகன் உள்ளார். இவர் புதுப்பட்டி அரசு பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வருகிறான்.

கடந்த ஐந்தாண்டுக்கு முன் வெளியூரில் தங்கியிருந்த தேன்மொழி தனது மகன் இளமுருகனுடன் பாம்பம்பாடி கிராமத்துக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளார். இளமுருகன் தனது தந்தை தனபாலிடம் சென்று அவருக்கு சொந்தமான நிலத்தில் பங்கு கேட்டு வந்தார். கடந்த 3 மாதத்துக்கு முன் வயலில் புல்லை தூக்கி வரும்போது தனபால் தவறி விழுந்ததில் அவரது முதுகெலும்பு உடைந்துள்ளது. கை, கால் செயலிழுந்து இதில் வீட்டிலேயே தனபால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனபால் உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் அவரது முதல் மனைவி தேன்மொழி, இரண்டாவது மனைவி சின்னப்பிள்ளை ஆகியோர் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சின்னப்பிள்ளை கம்பைநல்லூருக்கு சென்று நாட்டு மருந்து வாங்கி வருவதாகவும் அதுவரை தந்தையை நீ பார்த்துக்கொள் என்று இளமுருகனிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். நேற்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பிய சின்னப்பிள்ளை தனபால் இறந்து கிடந்ததை பார்த்துள்ளார். இதுகுறித்து சின்னப்பிள்ளை ஏ.பள்ளிப்பட்டி போலீஸில் புகார் செய்தார். சந்தேகத்தின் பேரில் இளமுருகனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தந்தையை இளமுருகன் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தன்னை சித்தி கேவலமாக திட்டியதாகவும், தந்தை பங்கு கொடுக்காததாலும், தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸார் இளமுருகனை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us