sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.-84.18 லட்சம் நலத்திட்ட உதவி 167 பயனாளிகளுக்கு வழங்கல்

/

ரூ.-84.18 லட்சம் நலத்திட்ட உதவி 167 பயனாளிகளுக்கு வழங்கல்

ரூ.-84.18 லட்சம் நலத்திட்ட உதவி 167 பயனாளிகளுக்கு வழங்கல்

ரூ.-84.18 லட்சம் நலத்திட்ட உதவி 167 பயனாளிகளுக்கு வழங்கல்


ADDED : அக் 10, 2024 01:32 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.-84.18 லட்சம் நலத்திட்ட உதவி

167 பயனாளிகளுக்கு வழங்கல்

தர்மபுரி, அக். 10-

தர்மபுரி மாவட்டம், மிட்டாநுாலஹள்ளியில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தி.மு.க., - எம்.பி., மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வருவாய்த்துறை சார்பில், 56 பயனாளர்களுக்கு, 26.88 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், 8 பயனாளிகளுக்கு, 98,400 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், 29 பயனாளிகளுக்கு, 3.60 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்

துறையின் சார்பில், 25 விவசாயிகளுக்கு, 19.32 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர்கடன் வழங்கப்பட்டது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நான்கு விவசாயிகளுக்கு, 1.22 லட்சம் மதிப்பில் சொட்டுநீர் பாசனம் அமைத்தல் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 2 விவசாயிகளுக்கு, 1.61 லட்சம் ரூபாய் என மொத்தம், 167 விசாயிகளுக்கு, 84.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us