ADDED : ஏப் 24, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில், அ.தி.மு.க., -- சம்பத்குமார், தி.மு.க., - சண்முகம், த.வெ.க., - ராகேஷ், நா.த.க., - அனிதா உட்பட மொத்தம், 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்-றனர்.
இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு பாட்சாபேட்டை ஓட்டுச்சாவடி அருகில், தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டு-வாடா செய்வதாக கூறி, த.வெ.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தி.மு.க., மற்றும் த.வெ.க.,வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்-பட்டதுடன், இருதரப்பினருக்கும் கைகலப்பில் ஈடுபட முயன்றனர். அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
