sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியல 'வாட்ஸாப்'பில் தி.மு.க., நிர்வாகி புலம்பல்

/

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியல 'வாட்ஸாப்'பில் தி.மு.க., நிர்வாகி புலம்பல்

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியல 'வாட்ஸாப்'பில் தி.மு.க., நிர்வாகி புலம்பல்

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியல 'வாட்ஸாப்'பில் தி.மு.க., நிர்வாகி புலம்பல்


ADDED : மார் 12, 2026 06:44 AM

Google News

ADDED : மார் 12, 2026 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே, மானியதஹள்ளி கிராம பஞ்.,ல் குடிநீர் தட்டுப்பாட்டை கடந்த, 4 மாதங்களாக தீர்க்க முடியவில்லை என, சமூக வலைதளத்தில் தி.மு.க., நிர்வாகி புலம்பியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஹள்ளி பஞ்., கடந்த சில மாதங்களுக்கு முன், 2 பஞ்.,களாக பிரிக்கப்பட்-டது. மானியதஹள்ளி பஞ்., 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்-களை உள்ளடக்கியது. இங்கு கடந்த, 4 மாதங்களாக குடிநீர் தட்-டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பஞ்., நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க-வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., மாவட்ட விவசாய அணி துணை அமைப்-பாளர் செல்வம், 'வாட்ஸாப்' குரூப் ஒன்றில், வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

பஞ்.,ல் குடிநீர் தட்டுப்பாடு குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலகத்-துக்கு சென்று முறையிட்டால், அதிகாரிகள் உடனடியாக பஞ்., செயலரிடம் விசாரிக்கின்றனர்.

அவர்கள் அனைத்து இடங்களிலும் குடிநீர் பற்றாக்குறையின்றி வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறி, பிரச்னைகளை மூடி மறைத்து விடுகின்றனர். ஜருகு வாரச்சந்தைக்கு முன்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கடந்த, 4 மாதங்களாக தண்ணீர் வினி-யோகம் செய்ய முடியவில்லை. பஞ்.,ல் பெரும்பாலான இடங்-களில் இதே நிலைதான் உள்ளது. எனவே, செயல்படாத பஞ்., செயலர்கள், நீங்களாவே 'டிரான்ஸ்பர்' வாங்கிச்செல்லுங்கள். இல்லையென்றால், மாவட்ட கலெக்டரிடம் சொல்லி நடவ-டிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் பதிவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us