sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்

/

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்


ADDED : ஜன 27, 2025 02:43 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என்ற, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவை கடந்தாண்டு, டிச., 28ல் துவங்கியது. நடப்பு அர-வைக்கு, 5,139 ஏக்கரில் பதிவு செய்யப்பட்ட கரும்பு, 1.30 லட்சம் டன் அரவை செய்ய இலக்கு திட்டமிடப்பட்டு கரும்பு வெட்டும் பணி நடக்கிறது. இந்நிலையில் கரும்புக்கான அரசின் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி-படி, கரும்பு டன்

ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்-ளனர். இது குறித்து பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்-பினர் குழந்தை ரவி கூறியதாவது: ஏற்கனவே, வறட்சி மற்றும் வேர்ப்புழு தாக்குதலால் கரும்புகள் பாதிக்கப்பட்டு தோட்டத்தில் காய்ந்துள்ளன. இதனால், கரும்புச்சாறு குறைந்து, எடை மற்றும் அதன் தரம் குறைவதுடன், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். இந்நிலையில், ஒரு டன்னுக்கு, 1,200 ரூபாய் வெட்டுக் கூலி வழங்கப்படுவதுடன், தொழிலாளர்கள் சென்று வர, வாடகை வாகனமும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், ஆலை நிர்வாகம் டன் ஒன்றுக்கு, 3,532 ரூபாய் வழங்குகிறது. உழவு செய்தல், கரும்பு நடவு, களை எடுத்தல், தோகை எடுத்தல்

உள்ளிட்ட பராமரிப்பு செலவு மற்றும் வெட்டுக்கூலி, மாமூல், உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. ஆனால், கரும்பின் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படவில்லை. இதை கணக்கிட்டால் விவசாயிக-ளுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்-சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் தேர்தல் வாக்-குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே கரும்பு விவசாயி-களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போதைய அரவை பரு-வத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us