ADDED : மார் 19, 2026 07:08 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர், தளி சட்டசபை தொகுதிகளுக்கு, இந்திய தேர்தல்
ஆணையத்தால், தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகுல் பாண்டே
நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் , ஓசூர் சட்டசபை தொகுதிக்கு
வருகை தந்தார்.ஓசூர் தின்னுார் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில்,
தேர்தல் பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல்
அலுவலருமான தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, ஓசூர் சட்டசபை
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-க-லெக்டர் ஆக்ரிதி சேத்தி, தளி
சட்டசபை தொகுதி தேர்தல் அலு-வலர் பழனி ஆகியோருடன், தேர்தல்
பார்வையாளர் ராகுல்-பாண்டே ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரே,
தாசில்தார் குணசிவா உட்பட பலர் உடனிருந்தனர்.
