/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 07, 2024 03:13 AM
பாப்பிரெட்டிப்பட்டி : கடத்துாரில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடத்துார், பொம்மிடி, புட்டிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, மோட்டாங்குறிச்சி, மணியம்பாடி, அஸ்திகிரியூர் உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:
கடத்துாரில் கடந்த, 4 நாட்களுக்கு முன்பு வரை, 25 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 800 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 1,800க்கு விற்பனையானது. விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்துள்ளது. வடமாநிலங்களுக்கு அதிகளவில் தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. இதுவும், விலை உயர்வுக்கு காரணம். மழையின்மை, கடும் வெயிலால் மண்டிகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.