sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மேட்டூர் அணை கால்வாயில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்; விவசாயிகள் புகார்

/

மேட்டூர் அணை கால்வாயில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்; விவசாயிகள் புகார்

மேட்டூர் அணை கால்வாயில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்; விவசாயிகள் புகார்

மேட்டூர் அணை கால்வாயில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்; விவசாயிகள் புகார்


ADDED : நவ 01, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.

அதில் விவசாயிகள் பேசிய விபரம் வருமாறு:

சிவக்குமார்: ஆத்துார் தாலுகாவில், மாவு பூச்சி, செம்பேன் தாக்குதலால், 500 ஏக்கரில் மரவள்ளி பயிர் பாதிக்கப்பட்டு, ஏக்கருக்கு 10 டன்னுக்கு பதிலாக, 2 டன் மட்டுமே சாகுபடி கிடைத்துள்ளதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக கணக்கிட்டு, விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

நாகராஜ்: மேட்டூர் அணை இடது, வலது கால்வாயில் இரவு நேரங்களில் மாட்டிறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, கால்வாய் கரையோர பகுதிகளில் நோய் பரவும் அபாயம் உள்ளது. நவப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் மகாசபை கூட்டம் 5 ஆண்டாக நடத்தப்படவில்லை. அதனால் சங்க வரவு, செலவு, நிகர லாபம், நஷ்டம் எதுவும் உறுப்பினர் களுக்கு தெரியவில்லை.

வடிவேல்: தலைவாசல், பெரியேரி கிராமத்தில், 2001ல், 32 குடும்பங்களுக்கு ஒப்படை பட்டா வழங்கப்பட்டது. அவை இதுவரை, வருவாய்த்துறை ஆவணத்தில் பதிவேற்றம் செய்யப்படாத காரணத்தால், உரிய பட்டா கிடைக்காமல், 32 குடும்பத்தினர், 24 ஆண்டாக போராடி வருகின்றனர்.

கோவிந்தராஜ்: பெத்தநாயக்கன்பாளையம், வைத்திய கவுண்டன்புதுார் ஏரியில் வண்டல்மண் அள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. 2019க்கு பின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர், பிரதமர் நிதியுதவி திட்டத்தில் இணைக்காமல் வேளாண் அதிகாரிகள் போக்குகாட்டுவதால், ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

செந்தில்: தாதம்பட்டி, அல்லிகுட்டை, வெங்கடாசலம் காலனி, சின்னம்மாபேட்டை உள்ளிட்ட பகுதி விளைநிலங்களின் பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்த போது, அரசு புஞ்சை என தவறாக பதிவாகி உள்ளது. அதற்காக, 4 ஆண்டாக போராடி, முந்தைய ஆர்.டி.ஒ., அபிநயா, அரசு புஞ்சைக்கு பதிலாக, ரயத்து புஞ்சை என திருத்தம் செய்யும்படி, சேலம் மைய தாசில்தார், சார் ஆய்வாளர் ஆகியோருக்கு கடந்த ஆக.,25ல் உத்தரவிட்டார். ஆனால், தாலுகா அதிகாரிகள் விவசாயிகளை அலைகழிப்பு செய்கின்றனர்.

இவ்வாறு பேசினர்.






      Dinamalar
      Follow us