sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மானிய டிராக்டருக்கு பரிந்துரை அதிகாரி மீது விவசாயிகள் புகார்

/

மானிய டிராக்டருக்கு பரிந்துரை அதிகாரி மீது விவசாயிகள் புகார்

மானிய டிராக்டருக்கு பரிந்துரை அதிகாரி மீது விவசாயிகள் புகார்

மானிய டிராக்டருக்கு பரிந்துரை அதிகாரி மீது விவசாயிகள் புகார்


ADDED : ஆக 29, 2025 05:43 AM

Google News

ADDED : ஆக 29, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: 'தி.மு.க., ஒன்றிய செயலர்கள் பரிந்துரை இருந்தால் தான், மானிய விலை டிராக்டர் வழங்கப்படும்' என, அதிகாரி கூறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது.

விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பேசியதாவது:

சிப்பம் கட்டும் அறை, மானிய விலையில் டிராக்டர், மினி டிராக்டர் ஆகியவற்றை வழங்க அதிகாரிகளை அணுகினால், 'தி.மு.க., ஒன்றிய செயலர்கள், ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் பரிந்துரை செய்தவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என, தமிழக வேளாண் அமைச்சரின் உதவியாளர் கூறியுள்ளார். எனவே, இந்தாண்டு வாய்ப்பில்லை' என, மொரப்பூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கூறுகிறார்.

இவ்வாறு புகார் தெரிவித்தனர்.

மொரப்பூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்கு நர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், ''விவசாயிகளிடம், அதுபோன்று நான் எதுவும் கூறவில்லை. டிராக்டர், மினி டிராக்டர் வேளாண் பொறியியல் துறை மூலம் தான் வழங்கப்படுகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us