/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
அரூரில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 08, 2024 05:03 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மாலை, 5:30 முதல், நேற்று அதிகாலை, 1:00 மணி வரை, அரூர், தீர்த்தமலை, மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, தொட்டம்பட்டி, ஈச்சம்பாடி, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. சூறைக்காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

