sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

/

நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : செப் 15, 2025 01:46 AM

Google News

ADDED : செப் 15, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டில் பெய்த பருவமழையால், நெல் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில், சராசரியாக, 27,000 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாததால், நெல் சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வந்தது. கடந்தாண்டு நெல் சாகுபடி இலக்கு, 18,460 ஹெக்டர் நிர்ணயிக்கபட்ட நிலையில், பெஞ்சல் புயலால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து, 26,442 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி நடந்தது. நடப்பாண்டில் கோடை மற்றும் தென்மேற்கு பருவமழை, மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பெய்ததால், மழையளவு சராசரி அளவை எட்டியது. மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகளுக்கு நீர்வரத்து கேள்வி குறியான போதும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சபள்ளி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உட்பட பெரும்பாலான பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வடகிழக்கு பருவமழையும் கை கெடுக்கும் என்ற நம்பிக்கையில், நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பல ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டில் நெல் சாகுபடி, 27,030 ஹெக்டர் பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சாகுபடி பரப்பளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, வேளாண் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் விற்பனை, தர்மபுரி மாவட்டத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us