/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
/
உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : அக் 14, 2024 06:24 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதை சுற்றி பொம்மிடி, கேத்துரெட்டிப்பட்டி, பையர்நத்தம் திப்-பிரெட்டிஹள்ளி, கொண்டகரஹள்ளி, பண்டாரசெட்டிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி அஜ்ஜம்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியிலுள்ள விவசாயிகள் பலர் தக்-காளி, கத்திரி, வெண்டை, கீரை, பழங்களை அதிகளவில் பயிரிடு-கின்றனர்.
அவற்றை, தினமும் பொ.மல்லாபுரத்தில் இரவில் நடக்கும் காய் கறி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் உரிய விலை கிடைப்பதில்லை. சந்தையில் புரோக்கர்கள் ஈடுபட்டு அதிக லாபம் அடைவதால், விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்-கின்றனர்.எனவே, பொ.மல்லாபுரம் நகரை மையமாக கொண்டு உழவர் சந்தை அமைத்தால், அப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவர். மேலும், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் குறைந்த விலையில் காய்கறிகள், கீரைகள் பழங்கள் கிடைக்கும். உழவர் சந்தை அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.