/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு விவசாயிகள் வருகை குறைவு
/
அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு விவசாயிகள் வருகை குறைவு
அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு விவசாயிகள் வருகை குறைவு
அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு விவசாயிகள் வருகை குறைவு
ADDED : பிப் 23, 2024 04:29 AM
தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 94,370 ரூபாய் அளவுக்கு பட்டுக்கூடு ஏலம் நடந்தது.
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். நேற்று விவசாயிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். பின் விவசாயிகள் வருகை குறைந்து, நேற்று முன்தினம், 10 பேரும் நேற்று, 4 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர்.
இவர்கள், 6 குவியல்களாக, 209 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 361 முதல், 516 ரூபாய் வரை சராசரியாக, 452 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 94,370 ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 1,416 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.