/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
2வது மனைவிக்கு பாலியல் தொந்தரவு: மகனை கொன்ற தந்தை கைது
/
2வது மனைவிக்கு பாலியல் தொந்தரவு: மகனை கொன்ற தந்தை கைது
2வது மனைவிக்கு பாலியல் தொந்தரவு: மகனை கொன்ற தந்தை கைது
2வது மனைவிக்கு பாலியல் தொந்தரவு: மகனை கொன்ற தந்தை கைது
ADDED : நவ 28, 2025 12:12 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, சித்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மகனை, அடித்து கொன்ற தந்தை மற்றும் சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே ஜொல்லம்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெய்சங்கர், 58. இவரின் மனைவி இறந்த நிலையில், இரண்டாவதாக சித்ரா, 45, என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கோவிந்தராஜ், 23, உட்பட, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.
இந்நிலையில், ஜெய்சங்கர் முதல் மனைவியின் மகன் சரவணன், 35, எந்த வேலைக்கும் செல்லாமல், சுற்றித்திரிந்து வந்தார். மேலும் இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தினமும் மது போதையில் தந்தை ஜெய்சங்கர் மற்றும் சித்தி சித்ரா ஆகியோரை ஆபாசமாக பேசி வந்தார். மேலும், சித்தி சித்ராவுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவும் செய்து வந்தார்.
இதையறிந்த ஜெய்சங்கர், சரவணனை கண்டித்தார். ஆனாலும் சரவணன் தொடர்ந்து சித்ராவுக்கு தொந்தரவு செய்த வண்ணமாக இருந்தார். இதனால், ஜெய்சங்கர் மற்றும் குடும்பத்தினர் சரவணனை கொலை செய்ய திட்டமிட்டனர்.
காரிமங்கலம் அடுத்த பையம்பட்டியானுாரை சேர்ந்த அன்பரசு, 27, என்பவரை துணைக்கு அழைத்து, 25ம் தேதி இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த சரவணனை, வீட்டின் மேல் மாடிக்கு அழைத்துச்சென்று, ஜெய்சங்கர், கோவிந்தராஜ், அன்பரசு ஆகியோர் சரமாரியாக அடித்து, செங்கல்லால் தாக்கினர்.
இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சரவணன் உடலை மாடியிலிருந்து இழுத்து வந்து, வீட்டிற்கு முன் போட்டு விட்டு சென்றனர். மறுநாள் சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக, அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சரவணன் கொலை செய்யப்பட்ட விபரம் தெரிந்தது. இதையடுத்து ஜெய்சங்கர், அவரின் மகன் கோவிந்தராஜ் ஆகியோரை காரிமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர். அன்பரசை போலீசார் தேடி வருகின்றனர்.

