/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கல்லுாரி விடுதியில் தீ தடுப்பு ஒத்திகை
/
கல்லுாரி விடுதியில் தீ தடுப்பு ஒத்திகை
ADDED : ஏப் 20, 2025 01:37 AM
பாப்பிரெட்டிப்பட்டி:--
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லுாரி மாணவர் விடுதியில், தீ விபத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது. தீ தொண்டு வாரத்தையொட்டி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை வகித்தார்.
இதில், கல்லுாரி மற்றும் விடுதி உள்ளிட்ட பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றம் அடையாமல், அருகிலுள்ள மணல், தண்ணீர் மற்றும் தீ அணைப்பான் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தல், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு முதலுதவி செய்தல், தீயணைப்பு உபகரணங்கள் பராமரித்தல் குறித்து, செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து, தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதேபோன்று அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு தீ தடுப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.