ADDED : ஏப் 17, 2025 07:29 AM
அரூர்: அரூர் அடுத்த நாச்சினாம்பட்டியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது. தீ தொண்டு வாரத்தையொட்டி, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தர்மபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமை வகித்தார்.
இதில், தனியார் நிறுவனத்தில், தீ விபத்து ஏற்பட்டால் பதற்றம-டையாமல் அருகிலுள்ள மணல், தண்ணீர் மற்றும் தீ அணைப்பான் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தல், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு முதலுதவி செய்தல், தீ அணைப்பு உபகரணங்களை பராமரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. மேலும், தீ விபத்து குறித்து, தீய-ணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்-பட்டது. தீயை அணைப்பது குறித்து பெண்கள் பயிற்சி பெற்-றனர்.