ADDED : மார் 03, 2026 10:20 AM

பென்னாகரம்: பென்னாகரம் ஒன்றியம், சின்னப் பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், பென்னாகரம் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு, மீட்பு, வினாடி - வினா போட்டி நடந்தது.
தலைமையாசிரியர் பழனி தலைமையில், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சந்தோசம், மாணவர்களுக்கு தீத்தடுப்பு நடவடிக்கைகள் சார்பாக பல்வேறு கருத்துக்களை வழங்கினார். தீ விபத்தின்போது அழைக்க வேண்டிய உதவி எண், தீ பற்றிக் கொண்டால் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், வீடுகளில் உள்ள சிலிண்டர்களை பாதுகாப்பாக எவ்வாறு பயன்படுத்து என்பது உட்பட பல்வேறு கருத்துகளை மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து, வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
இதேபோல் கொட்டாய்வூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் குமார் தலைமையில் நடந்தது.

