ADDED : ஜூன் 07, 2026 04:10 AM

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் தீயணைப்பு நிலை-யத்தில், நேற்று காலை, 11:00 முதல், 12:00 மணி, மற்றும் மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை, 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற நிகழ்ச்சி நடத்-தப்பட்டது. இதில், மின் கசிவு, காஸ் அடுப்பு விபத்து, தண்ணீரில் அடித்து செல்லும் போது தங்களை எவ்வாறு காப்பாற்றி கொள்வது குறித்து, பொதுமக்களுக்கு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில், தீயணைப்பு வீரர்கள் உபகரணங்கள் மூலம் செயல்விளக்கம் அளித்-தனர்.
மேலும், தீயணைப்பு நிலையத்தை சுற்றிப்-பார்த்து இயந்திரங்களின் செயல்பாடு, எந்த கரு-வியை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் போன்ற அடிப்படை பயிற்சிகள், மீட்பு பணிகளுக்-காக பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள் குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 2 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பு இன்றுடன் (ஜூன், 7) முடிகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.
