sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நிரம்பிய பாம்பாறு அணை வெள்ள அபாய எச்சரிக்கை

/

நிரம்பிய பாம்பாறு அணை வெள்ள அபாய எச்சரிக்கை

நிரம்பிய பாம்பாறு அணை வெள்ள அபாய எச்சரிக்கை

நிரம்பிய பாம்பாறு அணை வெள்ள அபாய எச்சரிக்கை


ADDED : டிச 03, 2024 01:15 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிரம்பிய பாம்பாறு அணை

வெள்ள அபாய எச்சரிக்கை

ஊத்தங்கரை, டிச. 2-

ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதி மற்றும் அருகே திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளில், 'பெஞ்சல்' புயலால் தொடர் மழை பெய்கிறது. இதனால், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 3,345 கன அடியாக அதிகரித்துள்ளது. 19.6 அடி உயர அணையில் தற்போது 18.6 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளதால், அணை பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உபரி நீரான 3,345 கன அடி நீர், 5 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், பாம்பாறு ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us