sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஊருக்குள் சிறுத்தைகள் நடமாட்டம் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

/

ஊருக்குள் சிறுத்தைகள் நடமாட்டம் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஊருக்குள் சிறுத்தைகள் நடமாட்டம் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஊருக்குள் சிறுத்தைகள் நடமாட்டம் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை


ADDED : பிப் 20, 2025 07:31 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: ஊருக்குள் சிறுத்தைகள் சுற்றி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்-புடன் இருக்க, வனத்துறையினர்- ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதி வாழைத்தோட்டம் ஜோடிசுனை அருகே, 3 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். சிறுத்-தைகள் தினமும் அப்பகுதி வீடுகளில் நாய், கோழிகளை குறி-வைத்து வேட்டையாடி வருகிறது.

கடந்த, 17 நள்ளிரவு வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த வினாயகம் என்பவரது வீட்டின் முன்பிருந்த நாயை, சிறுத்தை கவ்வி சென்ற, 'சிசிடிவி' காட்சிகள் பொதுமக்களுக்கு பீதியை ஏற்-படுத்தியது. அப்பகுதியிலுள்ள சாலை வழியாக மாணவர்கள் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க, அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, வாழைத்தோட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், வனப்பகுதிக்குள் செல்லவோ, கால்நடைகளை மேய்ச்ச-லுக்கு அழைத்து செல்லவோ வேண்டாம் எனவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும், பாலக்கோடு வனத்துறை-யினர் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us