/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : ஏப் 17, 2025 01:52 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று மதியம், 2:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அலங்கரித்த தேரில், உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டார்.
ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்டல தலைவர் ரவி ஆகியோர் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
மிடுகரப்பள்ளி கிராமத்திலிருந்து, தேன்கனிக்கோட்டை சாலை வழியாக மத்திகிரி மாரியம்மன் கோவிலுக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து சென்றனர். ஓசூர் சுற்றுப்புற கிராம மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள், அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று, தின்னுார் பகுதி மக்களால் காலை, 10:00 மணிக்கு அழகு குத்தும் நிகழ்ச்சி, மதியம், 2:45 மணிக்கு அம்மன் உற்சவம், மிடுகரப்பள்ளி கிராம மக்கள் சார்பில் மதியம், 3:00 மணிக்கு சிடி உற்சவம், நவதி மக்களால் மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடக்கிறது. நாளை கோட்டை மாரியம்மன் பல்லக்கு
உற்சவம் நடக்கிறது.