ADDED : மே 15, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
கம்பைநல்லுார்; தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளது. இதில், 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் சனத்குமார் ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகின்றன. விறகு-களைக் கொண்டு சடலங்கள் எரியூட்டப்பட்டதால், அதிகப்படியான செலவு ஏற்பட்டதுடன், சுற்றுச்சூ-ழலும் மாசடைந்து வந்தது. இதையடுத்து, சனத்-குமார் நதி கரையோர சுடுகாட்டில், கருணாநிதி நகர்புற மேம்பாடு திட்டம், 2023 -24ல், 1.55 கோடி ரூபாய் மதிப்பில், நவீன எரிவாயு தகனமேடை கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்-டது.
