/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோ-கோ போட்டி: ஸ்டான்லி பள்ளி முதலிடம்
/
கோ-கோ போட்டி: ஸ்டான்லி பள்ளி முதலிடம்
ADDED : டிச 11, 2024 01:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 11----
தர்மபுரி மாவட்ட அளவில் நடந்து வரும் குழு விளையாட்டு போட்டிகளில், பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி மாணவர்கள், கோ-கோ போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி மாணவ, மாணவியர் வயது வரம்பு அடிப்படையில் நடந்த மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் பெண்களுக்கான சூப்பர் சீனியர் பிரிவில் மாணவியர் முதலிடமும், ஆண்களுக்கான பிரிவில் ஜூனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர்கள் முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
ஆண்களுக்கான சீனியர் பிரிவில் மாணவர்கள், 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார், திவ்யா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.