/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : ஜன 08, 2025 07:09 AM
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையாகின.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வார செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று அதிகாலையில் ஆட்டு சந்தை கூடியது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வந்திருந்தனர். கடந்த மாதம் முதல், ஆடுகள் வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. நேற்று நடந்த ஆட்டு சந்தையில், 700க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஆடுகளின் எடை அளவை பொறுத்து, 4,000 -முதல், 20,000 ரூபாய் வரை விற்பனையாகின. ஆடுகள் வரத்து அதிகரிப்பால், நேற்று நடந்த ஆட்டு சந்தையில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானது.