sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் அரசு பள்ளி ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'

/

மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் அரசு பள்ளி ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'

மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் அரசு பள்ளி ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'

மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் அரசு பள்ளி ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'


ADDED : செப் 04, 2025 01:22 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூர் அருகே, அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு, மாணவர்கள் கால் அமுக்கிய வீடியோ வைரலான நிலையில், ஹெச்.எம்.,ஐ 'சஸ்பெண்ட்' செய்து, டி.இ.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டியிலுள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் தலைமையாசிரியை உட்பட, 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாணவ, மாணவியர் சிலர், வகுப்பறையிலுள்ள பெஞ்சில் படுத்திருக்கும் தலைமையாசிரியை

கலைவாணியின் கை, கால்களை பிடித்து, அமுக்கி விடும் வீடியோ வைரலானது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை பள்ளியை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பள்ளிக்கு வந்த அரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஜய குமார், விசாரணை நடத்தி, தலைமையாசிரியை கலைவாணியை, வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று அவரை, 'சஸ்பெண்ட்' செய்து

உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us