ADDED : ஜூலை 31, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்க்க குறைதீர் கூட்டம், மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் நடத்தப்படுகிறது.
அதன்படி, ஆக., 2 ல் தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., தலைமையில் நடக்க உள்ளது. இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, ஆர்.டி.ஓ., காயத்ரி தெரிவித்துள்ளார்.