sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கொலை வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்

/

கொலை வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்

கொலை வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்

கொலை வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்


ADDED : பிப் 17, 2024 12:28 PM

Google News

ADDED : பிப் 17, 2024 12:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: காரிமங்கலம் அருகே பெரியமிட்டஹள்ளியை சேர்ந்த சரவணன், 36. தொழிலாளியான இவருக்கு ஒண்டிப்புளியமரம் என்ற பகுதியில் நிலம் உள்ளது. இதில் கடந்த ஆண்டு டிச.,31-ம் தேதி சிலர் மது அருந்தியுள்ளனர்.

அப்போது, அவ்வழியே சென்ற சரவணன் தன் நிலத்தில் மது அருந்தியவர்களை கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பல் சரவணனை கத்தியால் தாக்கி கொலை செய்தனர்.

இது தொடர்பாக, காரிமங்கலம் போலீசார் கடந்த ஜன., 1ல், கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னிஹள்ளியை சேர்ந்த பிரகாஷ், 25, கோபிநாத், 23, விக்னேஷ், 27, இளங்கோ, 25, பழையபேட்டை முனியப்பன், 21, காரிமங்கலம் அடுத்த முக்குளம் தமிழரசன், 23, உள்ளிட்ட, 10 பேரை கைது செய்தனர். கொலையின் தன்மையை கவனத்தில் கொண்டு, வழக்கின் முதலாவது குற்றவாளியான பிரகாஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, மாவட்ட எஸ்.பி.,ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார்.

மாவட்ட கலெக்டர் சாந்தி அனுமதி அளித்த நிலையில், ஏற்கெனவே கைதாகி சேலம் சிறையில் உள்ள பிரகாஷ் மீது, குண்டர் சட்டத்தில் வழக்கு பதிந்து, அதற்கான நகலை சேலம் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us