/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 01, 2026 04:31 AM
அரூர்: அரூரில் இருந்து, தர்மபுரி செல்லும், 4 வழிச்சாலையில், அரசு மருத்துவமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக கிளை பணிமனை, அரசு கலை கல்லுாரி உள்ளது. இதன் அருகில், அரூர் நகரில் செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள், தனியார் மருத்துவமனை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்-படுகிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. சாலையை கடக்கும் பஸ் பயணியர், இருசக்கர வாகன ஓட்டிகள், மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக குப்பையை அகற்றவும், மீண்டும் அப்-பகுதிகளில் குப்பை கொட்டாதவாறு கண்காணிக்கவும், பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

