ADDED : அக் 15, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் பகுதியில் சாரல்மழை
அரூர், அக். 15-
தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அரூரில், நேற்று காலை, 6:00 முதல், 9:30 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் மழையில் நனைந்தபடி பள்ளி மற்றும் கல்லுாரிக்கு மாணவ, மாணவியர் சென்றனர். பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை, 5:30 மணிக்கு சாரல்மழை பெய்தது.