/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்
ADDED : ஜன 21, 2026 10:53 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் அரசு கலைக்கல்லுாரி முன்பு, ஊதிய உயர்வு கோரி, கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று வாயிற்முழக்க போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 80க்கும் மேற்பட்டோர் கவுரவ விரிவுரையாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்-தோறும், 25,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றி வரும் கவு-ரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் யு.ஜி.சி., நிர்ணயித்-துள்ள, 50,000 ரூபாய் ஊதியமாக வழங்குவதுடன், மே மாதம் ஊதியம் இல்லாததாக கருதப்படுவதை மாற்றம் செய்து, 12 மாதங்களுக்கும், 50,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்-பதை வலியுறுத்தி, நேற்று வாயிற்முழக்க போராட்டத்தில் ஈடுபட்-டனர்.

