sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வரட்டாறு தடுப்பணைக்கு தொடர்மழையால் நீர்வரத்து

/

வரட்டாறு தடுப்பணைக்கு தொடர்மழையால் நீர்வரத்து

வரட்டாறு தடுப்பணைக்கு தொடர்மழையால் நீர்வரத்து

வரட்டாறு தடுப்பணைக்கு தொடர்மழையால் நீர்வரத்து


ADDED : ஆக 21, 2024 06:23 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்-துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது.

இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, கீரைப்-பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து வர துவங்கியது. கடந்த, 18ல், தடுப்பணையில் மொத்த கொள்ளளவான, 34.45 அடியில், 28 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று காலை, 6:00 மணிக்கு தடுப்பணை நீர்-மட்டம், 29 அடியாக உயர்ந்தது. தடுப்பணைக்கு வினாடிக்கு, 20 கன அடி நீர்வரத்து வருகிறது.






      Dinamalar
      Follow us