நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சுதாகர், 27, கூலித்தொழிலாளி: இவரது மனைவி ஹர்சினி, 23, தம்பதிக்கு மோனிஷ், 5, என்ற மகன் உள்ளார். ஹர்சினி கடந்த ஒன்றரை ஆண்டாக, அரூர் கூட்டுறவு வங்கியில், தற்காலிக பணி-யாளராக பணிபுரிந்து வருகிறார்.
தினமும் மாலையில், வங்கிக்கு சென்று பணி முடித்த பின், சுதாகர் மனைவியை அழைத்து செல்வது வழக்கம். கடந்த, 21ல் மாலை, 5:30 மணிக்கு மனைவியை அழைத்து வர சுதாகர் வங்-கிக்கு சென்றுள்ளார். அப்போது, ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஹர்சினி சென்று விட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்-ளனர். அவரது மொபைல்போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்-ளது. சுதாகர் புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

