/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கல்லுாரி மாணவர்களுக்கு 'லேப்டாப்'
/
கல்லுாரி மாணவர்களுக்கு 'லேப்டாப்'
ADDED : ஜன 06, 2026 07:10 AM
தர்மபுரி: தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, மாவட்ட கலெக்டர் சதீஸ், 'லேப்டாப்' வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று சென்னை வர்த்தக மைய வளாகத்தில், 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் மூலம், 10 லட்சம் 'லேப்டாப்'களை மாணவ, மாணவியருக்கு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சதீஸ், மாணவ, மாணவியருக்கு, 'லேப்டாப்' வழங்கினார். தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, முன்னிலை வகித்தார். இதில், 862 மாணவர்கள், 679 மாணவியர் என, 1,541 பேருக்கு, 'லேப்டாப்' வழங்கப்பட்டது.
இதில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், தர்மபுரி ஆர்.டி.ஓ., கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், நகராட்சி சேர்மன் லட்சுமி, மற்றும் மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

