/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பைக் மீது பஸ் மோதல் எல்.ஐ.சி., ஏஜன்ட் பலி
/
பைக் மீது பஸ் மோதல் எல்.ஐ.சி., ஏஜன்ட் பலி
ADDED : ஜன 26, 2025 04:34 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்-தவர் சிவசங்கர், 51. எல்.ஐ.சி., ஏஜன்டாக இருந்தார்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு வெங்கடசமுத்திரத்தில் இருந்து பொம்மிடி - --பாப்பிரெட்டிப்பட்டி ரோட்டில் தன் ஹோண்டா சைன் பைக்கில் ஹெல்மட் அணியாமல் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். வாணியாறு ஆற்று பாலம் அருகே செல்லும் போது, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வெங்கடச-முத்திரம் நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதில், தலையில் படுகாயம் அடைந்த சிவசங்கர் சம்பவ இடத்திலேயே பலி-யானார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சிவசங்கருக்கு, கலையரசி என்ற மனைவியும், மகன், மகளும் உள்ளனர்.