sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பொம்மிடியில் பெண்கள் எதிர்ப்பால் மதுக்கடை விரைவில் இடமாற்றம்

/

பொம்மிடியில் பெண்கள் எதிர்ப்பால் மதுக்கடை விரைவில் இடமாற்றம்

பொம்மிடியில் பெண்கள் எதிர்ப்பால் மதுக்கடை விரைவில் இடமாற்றம்

பொம்மிடியில் பெண்கள் எதிர்ப்பால் மதுக்கடை விரைவில் இடமாற்றம்


ADDED : ஜன 01, 2025 05:56 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சியில், 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 10,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் பொம்மிடி - அரூர் ரோட்டில், வட சந்தையூர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. அந்த கடையால் வடசந்தையூர், தென்சந்தையூர், துறிஞ்சிப்பட்டி, ஜெயந்தி காலணி, இந்திராகாலணி உள்ளிட்ட சுற்று வட்டார மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மது அருந்துவோர் சாலையோரம் குடிக்கின்றனர். பின் கிராம பகுதியில் நின்று, காலி பாட்டில்களை போதையில் உடைத்து போடுகின்றனர். மேலும் அவ்வழியே பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதி பெண்கள், மேற்படி மதுக்கடையை மாற்ற வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். ஊராட்சி கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஊராட்சி பகுதிகளில் குடிக்கவும், சாலையோரம் அமர்ந்து குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வடசந்தையூரில் இயங்கி வரும் கடையை, சந்தைப்பேட்டை பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில், கடை அங்கு மாற்றப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us