/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சத்துணவில் பல்லி: மாணவியர் அட்மிட்
/
சத்துணவில் பல்லி: மாணவியர் அட்மிட்
ADDED : பிப் 02, 2025 01:54 AM
அரூர்:அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட, 8 மாணவியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு நேற்று மதியம், 1:00 மணிக்கு சத்துணவாக சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. முதலில், 8 மாணவியர் சத்துணவை சாப்பிட்டுள்ளனர். அப்போது, பிளஸ் 1 மாணவி கனிஷ்கா, 16, என்பவரின் உணவில் பல்லி தலை இருந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த அவர், வாந்தி எடுத்துள்ளார். தொடர்ந்து சத்துணவு சாப்பிட்ட, ஏழு மாணவியர், இரவு காவலர் மலர்விழி, 45, ஆகியோர் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். மாணவியரை, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.