ADDED : ஜூன் 26, 2026 03:12 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்; தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம்
, 26, நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி எச்.பி., பெட்ரோல் பங்க் அருகே தணிக்கை மேற்கொண்டார். அப்போது, காரிமங்கலம் - பாலக்கோடு எஸ்.எச்., ரோடு அருகில், நொரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டார். லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில், அனும-தியின்றி மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, புவனமாணிக்கம் புகார் படி, காரிமங்-கலம் போலீசார் வழக்குப்பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
