ADDED : ஆக 08, 2026 05:52 AM

அ நிறம் | அளவு
பென்னாகரம்; பென்னாகரம் பகுதியில், மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி புவியியலாளர் புவன-மாணிக்கம் நேற்று முன்தினம் இரவு, பளிஞ்சர-அள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடு-பட்டார். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அனு-மதி பெறாமல் மண் கடத்தி வந்தது தெரிய வந்-தது.
பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் டிரைவர் தப்பி விட்டார். இதையடுத்து டிப்பர் லாரி பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்ப-டைக்கப்பட்டது.
