sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்

/

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்


ADDED : ஜூலை 12, 2025 01:06 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம் :பென்னாகரம் அடுத்த, சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் பழனி தலைமை வகித்தார். மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவினருக்குமான கொடிகள் முறையே சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், வெள்ளை கொடி அறிமுகப்படுத்தப்பட்டு, குழு தலைவரிடம் வழங்கி பதவியேற்பு விழா நடைபெற்றது.

மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்பாடு அடைய செய்வது, மாணவர்களிடையே குழு மனப்பான்மையை வளர்ப்பது, அனைவருக்குமான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவது, நேர்மறை நடத்தைகளை வலுவூட்டுதல், தலைமைத்துவ பண்பை வளர்த்தல், ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு குழுக்கள் செயல்பட இருக்கிறது.






      Dinamalar
      Follow us