/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாறுமாறாக காரை ஓட்டி 6 பேர் மீது மோதியவர் கைது
/
தாறுமாறாக காரை ஓட்டி 6 பேர் மீது மோதியவர் கைது
ADDED : ஜன 19, 2025 06:58 AM
மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் பொங்கல் பண்டி-கையை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை கோவில் திரு-விழா நடந்தது. இதில், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, மல்லா-புரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் மாரண்ட-ஹள்ளி போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை ஓட்டி வந்தவர், போலீசார் தடுத்தும் நிறுத்-தாமல், சாலையில் நடந்து சென்றவர்களின் மீது மோதினார். இதில், மாரண்டஹள்ளி வேங்குகவுண்டர் தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 27, ஹரிஹரன், 19, வெங்கடேசன், 53, தமிழரசன், 19, லோகேஷ், 19, பூபேஷ் கண்ணன், 19 உட்பட, 6 பேர் படு-காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் கார் கண்ணா-டியை உடைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், காரை ஓட்டிவந்த மாரண்டஹள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ், 38, என்பவரை கைது செய்தனர்.

