/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லாரியில் 30 டன் ரேஷன் அரிசி; கர்நாடகாவிற்கு கடத்தியவர் கைது
/
லாரியில் 30 டன் ரேஷன் அரிசி; கர்நாடகாவிற்கு கடத்தியவர் கைது
லாரியில் 30 டன் ரேஷன் அரிசி; கர்நாடகாவிற்கு கடத்தியவர் கைது
லாரியில் 30 டன் ரேஷன் அரிசி; கர்நாடகாவிற்கு கடத்தியவர் கைது
ADDED : டிச 05, 2025 11:16 AM

தர்மபுரி: தமிழக, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புல-னாய்வு துறை, ஈரோடு டி.எஸ்.பி., ராஜபாண்டி தலைமையில், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் சிவ-னேஸ்வரன், எஸ்.ஐ., யாசர் மவுலானா, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் காவலர் சுரேஷ் உள்ளிட்டோர் நேற்று, தர்மபுரியில், கிருஷ்ணகிரி - சேலம் நெடுஞ்சாலையில் ரோந்-துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபு-ரியில் இருந்து பென்னாகரம் செல்லும் பிரதான சாலையில், சந்தேகப்படும் படி ஒரு லாரி நிறுத்-தப்பட்டிருந்தது. அந்த லாரியில், ரேஷன் அரிசி இருப்பதாக கிடைத்த தகவலின் படி, அங்கு சென்ற போலீசார், லாரியில் சோதனை மேற்-கொண்டனர்.
அப்போது லாரியில், தமிழக அரசின் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. மேலும், தலா, 50 கிலோ எடையுள்ள, 600 மூட்டைகளில், 30,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்-பட்டது. இதையடுத்து, லாரி மற்றும் ரேஷன் அரி-சியை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ரேஷன் அரிசியை, பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி, மொத்தமாக கர்நாடகாவிற்கு, பென்னாகரம், அஞ்செட்டி வனப்பகுதி வழியாக கடத்த முயன்ற, தர்மபுரி அருகே சாமிசெட்டிப்-பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார், 43, என்பவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்-றனர்.

