sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

/

குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது


ADDED : ஜூலை 19, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, குடும்ப தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவியை சேர்ந்தவர் முருகன். இவரது இரண்டாவது மனைவி முனியலட்சுமி, 46. முருகனின் முதல் மனைவியின் மகன் முத்தரசன், 33, கூலித்தொழிலாளி. இவர்கள் இடையே சொத்து பிரச்னை இருந்தது. இவர்களுக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில், தாபா ஓட்டலை வாடகைக்கு விட்டனர். கடந்த, 16ல், தாபா ஓட்டலுக்கான வாடகையை முத்தரசன், முனியலட்சுமியிடம் கேட்டார். அவர் தர மறுத்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து அன்று இரவு, முத்தரசன் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீயை பொருத்தி முனியலட்சுமி தங்கி இருந்த வீட்டில் வீசினார். இதில் தீபிடித்து பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து, முனியலட்சுமி கொடுத்த புகார்படி பர்கூர் போலீசார் முத்தரசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us