ADDED : ஜன 27, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் பஸ் ஸ்டாண்டில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
தி.மு.க., மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட அமைப்பாளர் சந்தர் தலைமை வகித்தார்.இதில், கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பழகன், தர்ம-புரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர்கள் மலர்மன்னன், பெரியாழ்வார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை கழக நிர்வா-கிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.