ADDED : மே 23, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : அரூர் அடுத்த சங்கிலிவாடியை சேர்ந்தவர் பிரகாசம், 24, கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு அரூர் குரங்குபள்ளத்திலுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து பிரகாசம் அளித்த புகார் படி, அரூர் போலீசார், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெற்றிவேல், 34, என்பவரை நேற்று கைது செய்தனர்.

