ADDED : மே 07, 2026 02:53 AM
அ நிறம் | அளவு
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், நவலை ஏரிக்கரை சாலை அதிக வளைவுகளுடன் உள்ளது. இங்கு, தொடர் விபத்துகள் நிகழ்ந்ததால், சில ஆண்-டுகளுக்கு முன், விபத்தை தடுக்கும் வகையில், சாலை அகலப்ப-டுத்தப்பட்டு, இருபுறமும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
இருந்தபோதிலும் இப்பகுதியில், வளைவுகளை குறிக்கும் எச்ச-ரிக்கை பலகை இல்லை. அதேபோல், இங்குள்ள பாலத்தில் மின்-விளக்கு வசதி இல்லை. இதனால், புதிதாக இவ்வழியில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே, வளைவு பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைப்ப-துடன், மின் விளக்கு வசதி செய்து கொடுக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
