/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நதியை துாய்மைப்படுத்திய என்.சி.சி., மாணவர்கள்
/
நதியை துாய்மைப்படுத்திய என்.சி.சி., மாணவர்கள்
ADDED : நவ 26, 2024 06:48 AM
தர்மபுரி: தேசிய மாணவர் படை அமைப்பு தினம் நவ., 4ம் வாரம் கொண்-டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக, 'புனித் சாகர் அபியான்' என்ற புனித நதிகளை துாய்மை படுத்துதல் திட்டத்தின் படி, தர்மபுரி மாவட்டம், இருமத்துார் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம், சேலத்திலுள்ள, 11வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி வழி-காட்டுல் படி துாய்மை பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி அதி-யமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதியமான்-கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் அரசு மேல்நி-லைப்பள்ளி ஆகிய, 3 பள்ளிகளில் இருந்து, 150 என்.சி.சி., மாண-வர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ராணுவ வீரர்கள் சங்கர், சர்மா ஆகியோர் கலந்து கொண்-டனர். இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர்கள் முரு-கேசன், கணேசன், பாட்ஷா செய்திருந்தனர்.

